Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

இலங்கையின் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகைப்பட்டினத்திற்கும் இடையில் முன்னெடுக்கப்படவிருந்த கப்பல் போக்குவரத்து காலவரையறையின்றி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாளையை  தினம் (19) கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படும் என கப்பல் சேவை  நிறுவனம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.

தவிர்க்க முடியாத கடல் போக்குவரத்து விதிமுறைகளினாலும் காலநிலை மாற்றத்தினாலும் காங்கேசன்துறைக்கும் தமிழ்நாட்டின் நாகைப்பட்டினத்திற்கும் இடையில் முன்னெடுக்கப்படவிருந்த கப்பல் போக்குவரத்தினை நாளை ஆரம்பிக்க முடியவில்லையென கப்பல் சேவையை முன்னெடுக்கும் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாகையிலிருந்து காங்கேசன்துறைக்கான கப்பல் போக்குவரத்து மூன்றாவது முறையாக இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளது.

13 ஆம் திகதி கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்படுவதாக கூறப்பட்டது. பின்னர் 17 ஆம் திகதி முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டது.

எனினும்,  தொடரும் சீரற்ற வானிலையால் 19 ஆம் திகதிக்கு கப்பல் போக்குவரத்து முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலே மீண்டும்  கால வரையறையின்றி  ஒத்திவைக்கப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாகப்பட்டினத்தில் இருந்து காங்கேசந்துறைக்கு கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் 14ஆம் திகதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share: