Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

உணவு வாங்க வந்த வெளிநாட்டவர் ஒருவர், விலையை கேட்டு வாங்க மறுத்ததையடுத்து குறித்த உணவகத்தின் உரிமையாளர் எனக் கூறப்படும் நபர் அவரை மிரட்டும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சந்தேக நபரை நேற்று (16) கைது செய்துள்ளனர்.

கொழும்பு 12 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு அளுத்கடை பகுதியில் வீதி உணவு என்ற பெயரில் உணவு விற்பனை செய்யப்படும் இடத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வாழைத்தோட்ட பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (17) அளுத்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Share: