Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்து நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தனது தகவல்களை மாற்றி போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரித்துள்ளார்.

யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன்,குறித்த நபர் இன்று (10) அதிகாலை மலேசியாவின் கோலாலம்பூர் நோக்கி பயணிக்கவிருந்துள்ளார்.

அதிகாரிகளுக்கு அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் அவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள மனித கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share: