Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகள் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் இன்றைய தினம் விசாரணைகளுக்காக எடுத்துகொள்ளப்பட்டது.

இதன்போது, முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு பணிகளின் மூன்றாம் கட்ட பணிகளை திட்டமிட்ட வகையில் முன்னெடுப்பதற்கு இன்னும் நிதி கிடைக்கப்பெறவில்லை என குறித்த வழக்கின் அகழ்வு பணியில் ஈடுபட்ட தொல்லியல் திணைக்கள பேராசிரியர் ராஜ் சோமதேவவினால் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

இது தொடர்பாக அரசாங்க அதிபர் நீதி அமைச்சின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த வழக்கின் விசாரணைகளை எதிர்வரும் மார்ச் மாதம் 4ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

Share: