Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

சர்ச்சைக்குரிய மல்வானை வீடு மற்றும் அதனைச் சூழவுள்ள 15 ஏக்கர் காணிக்கு எவரும் உரிமை கோராத நிலையில், அதனை அபிவிருத்தித் திட்டமாக பயன்படுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டு ‘அரகலய’ மக்கள் இயக்கத்தின் போது எரிக்கப்பட்ட காணி மற்றும் சொகுசு வீட்டை நீதி அமைச்சர் நேற்று பார்வையிட்டார்.

இந்த ஆய்வுச் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்து அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, அரசாங்க சொத்தாக அறிவிக்கப்பட்டுள்ள குறித்த இல்லம் தொடர்பான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அமைச்சரவையுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவித்தார்.

Share: