சுற்றுலாத்துறைக்கு தேவையான வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சுமார் 1,000 வேன்கள் மற்றும் கார்கள் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பிரேரணைக்கு அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் அனுமதி கிடைக்கப் பெறும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.