Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

புதிய கொள்கையின் கீழ் இலங்கைக்கு வாகனங்களை இறக்குமதி செய்வது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக வாகன இறக்குமதி தொடர்பில் ஆராயும் உப குழுவின் உறுப்பினரான அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் உபகுழு கூடிய போது இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் நளீன் பெர்னாண்டோ, இந்த உப குழுவில் வாகன இறக்குமதி தொடர்பான கொள்கையை முன்னெடுப்போம், கடந்த 15-20 வருடங்களாக எந்த கொள்கையும் இல்லாமல் வாகனங்களை இறக்குமதி செய்து வருகிறோம்.

இதன் இறுதி முடிவு இந்த நாட்டிற்குத் தேவையான வாகனங்களுக்கு மேலதிகமாக, அதிக எரிபொருளைப் பயன்படுத்தும் வாகனங்கள் போன்ற பெரும் எண்ணிக்கையிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டன.

எனவே, கொள்கையுடன் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பை வழங்குவதற்கு எதிர்பார்க்கின்றொம்” என தெரிவித்துள்ளார்.  

Share: