வருகின்றனர்.
வரி குறைக்கப்படும், விலை சூத்திரங்கள் இல்லாதொழிக்கப்படும், உகண்டாவில் பதுக்கி வைத்துள்ள பணம் கொண்டு வரப்படும் என்று மேடைகளில் கூச்சலிட்டாலும், இறுதியில் ஜனாதிபதி தலைமையிலான ஜே.வி.பி அரசாங்கம் சர்வதேச நாணயத்திடம் மண்டியிட்டு எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அடிமையாகியுள்ளது. சாதாரண மக்கள் பயன்படுத்தும் எரிபொருட்களுக்கான விலையை குறைக்க வாய்ப்புள்ள நிலையில், அதை செய்யாமல் உயர் வர்க்கத்தினர் பயன்படுத்தும் எரிபொருளுக்கு மட்டும் இந்த வரியை குறைத்துள்ளனர்.
மோசடி, ஊழல், திருட்டு போன்றவற்றால் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டை முன்வைத்தவர்களே எரிபொருள் விலை சூத்திரத்தின் அடிமைகளாக மாறியுள்ளனர் என சஜித் பிரேமதாச இங்கு சுட்டிக்காட்டினார்.