Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மருந்து, எரிபொருள், உரம் வழங்க முடியாமல் தவித்த கடந்த காலத்தை யாரும் மறந்துவிடக் கூடாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

பொரலஸ்கமுவ ஹோட்டலில் நடைபெற்ற அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் சங்கத்தின் 09வது மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அடுத்த சந்ததியினருக்கு இவ்வாறான இருண்ட அனுபவத்திற்கு இடமளிக்காமல் புதிய பொருளாதார மாற்றத்தின் ஊடாக இலங்கையை கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்தில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.

Share: