Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நாடு முழுவதும் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்களில் 33,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதன்படி இரத்தினபுரி, கொழும்பு, கேகாலை, அனுராதபுரம், கண்டி, காலி, யாழ்ப்பாணம், களுத்துறை, புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளிலுள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் 1,827 பேர் தற்காலிக பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான நிவாரணத் திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.

Share: