Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடந்த மே மாதம் முதலாம் திகதி தேவையற்ற விதத்தில் நடந்து கொண்ட இளைஞனை விமான நிலைய பொலிஸ் அறைக்கு இன்று (06) காலை அழைக்கப்பட்டிருந்தார்.

சட்டத்தரணியான சந்தருவன் குமாரசிங்க என்ற குறித்த இளைஞன் இன்று காலை 10 மணி அளவில் விமான நிலைய பொலிஸ் அறையில் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், அவர் விமான நிலைய பொலிஸூக்கு வந்தபோது, வேறு சில வழக்கறிஞர்களும் அங்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விமான நிலையத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையை பதிவு செய்த குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூவரின் வாக்குமூலங்களை கட்டுநாயக்க பொலிஸார் நேற்று (05) மாலை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Share: