Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ஓமானில் ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்த கனமழையால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 17 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், ஓமானின் பல பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் அரசு நிறுவனங்களை மூடவும் ஓமான் அரசு முடிவு செய்துள்ளது.

கடும் வெள்ளம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது பல பகுதிகளில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன.

அடுத்த சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், கடும் மழை காரணமாக பல கார்கள் மற்றும் உடைமைகள் சேதமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

Share: