Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நாவலப்பிட்டி தொலஸ்பாகே பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று வீதிக்கு அருகில் உள்ள மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பேருந்தில் பயணித்த மூன்று பாடசாலை மாணவர்கள் உற்பட 9 பேர் காயமடைந்து நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

நாவலப்பிட்டி தொலஸ்பாகே பிரதான வீதியில் உடுவெல்ல பிரதேசத்தில் இன்று (09) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியில் உள்ள மண்மேட்டில் மோதியதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

Share: