Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ரமழான் பண்டிகை மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 11, 12, 13 ஆம் திகதிகளில் சிறைக் கைதிகளை உறவினர்கள் சந்திக்க விசேட ஏற்பாடு செய்யப்படும் என சிறைச்சாலை ஆணையாளர், ஊடகப் பேச்சாளர் காமினி பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

சிறையில் உள்ள இஸ்லாமிய மத கைதிகளை ரமழான் பண்டிகை தினமான 11ம் திகதி உறவினர்கள் சந்திக்க முடியும். 12, 13 ஆம் திகதிகளில் ஏனைய கைதிகளை உறவினர்கள் சந்திக்க முடியும்.

தற்போதுள்ள விதிமுறைகள் மற்றும் முறையான சுகாதார மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக வீட்டிலிருந்து கொண்டு வரப்படும் உணவு, இனிப்புகள் மற்றும் சுகாதார பொருட்களை மாத்திரம் கைதிகளுக்கு உறவினர்கள் வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் திஸாநாயக்க தெரிவித்துள்ளார் .

Share: