Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நாட்டில் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் பெரும்பாலான குழந்தைகள் மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துள்ளதோடு, தற்போது லென்ஸ் பயன்பாடும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே செலவிடுவதும், தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பதும் இன்று அதிகமான குழந்தைகள் குறுந்தூரப்பார்வை குறைப்பாடு கொண்டவர்களாக இருக்க முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பார்வை கோளாறுகள் அனைத்து விடயங்களிலும் சவாலாக மாறும் எனவும் வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share: