Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

சுற்றுலா பயணிகளை மையப்படுத்தி கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை விசேட ரயில் சேவையை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏப்ரல் 5 ஆம் திகதி முதல் நானுஓயாவில் இருந்து பதுளை வரை விசேட பெட்டியுடன் கூடிய ரயில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டையில் இருந்து பதுளைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு ஒரு ரயில்பயணிக்கவுள்ளது.

வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் மற்றும் வியாழன் ஆகிய நாட்களில் ஒரு ரயில் இயக்கப்படவுள்ளது.

குறுகிய தூர சுற்றுலாப் பயணிகளுக்காக மற்றுமொரு ரயில் நானுஓயாவிலிருந்து பதுளைக்கு ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share: