Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சர்ச்சை கருத்து வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் குறித்து இன்று(27) நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் ஆராய்ந்த சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், மைத்திரிபால சிறிசேன இரகசியப் பொலிஸாரிடம் வழங்கிய வாக்குமூலத்தை சட்டமா அதிபரிடம் சுட்டிக்காட்டிய பின்னர், விசாரணையின் முன்னேற்றம் குறித்து அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் மைத்திரிபால சிறிசேன ஆஜராகியதன் பின்னர், அதன் அதிகாரிகள் அவரை 6 மணித்தியாலங்களுக்கு மேலாக விசாரணை செய்தமை குறிப்பிடத்தக்கது.

Share: