Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

காஸாவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட, ஜனாதிபதி காஸா நிதியத்திற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் 500,000 ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

காஸா குழந்தைகள் நிதியத்திற்கு இதுவரை 5,773 ,512 ரூபாய் நன்கொடையாக கிடைக்கப்பெற்றுள்ளது.

குறித்த நிதி,காஸாவில் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் நலன்புரி தேவைகளுக்காக விரைவில் இலங்கை அரசாங்கத்தினால் அனுப்பிவைக்கப்பட உள்ளது.

வர்த்தகர்கள், பொது அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இந்த நிதியத்திற்கு உதவிகளை வழங்கிவரும் நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானும் நிதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share: