Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நாட்டின் பல பகுதிகளில் வெப்பநிலை இன்று (18) கவனத்திற்குரிய மட்டத்திற்கு மேலும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, வடமேற்கு, வடமத்திய, கிழக்கு, மேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், இரத்தினபுரி மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மனித உடலால் உணரப்படும் வெப்பம் அவதானத்திற்குரிய மட்டத்தில் காணப்படும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, போதுமான அளவு தண்ணீர் அருந்துதல், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுப்பது, கடுமையான வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

Share: