மாத்தறையில் இருந்து மட்டக்களப்பிற்கு விற்பனைக்காக கடத்தி சென்ற ஒரு கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் பிக்கு ஒருவர் உட்பட இருவரை நேற்று (07) இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்து கல்குடா பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.