Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துகுமாரன இன்று (05) சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

அனுராதபுரம் தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்ன இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாக இருந்த பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முத்துக்குமாரன நியமிக்கப்பட்டார்.

அனுராதபுரம் மாவட்டத்திற்கான SLPP பட்டியலில் அவர் அடுத்த இடத்தில் இருந்தார்.

பிரேமரத்ன தனது இராஜினாமா கடிதத்தை பெப்ரவரி 27 ஆம் திகதி பாராளுமன்ற பிரதிப் பொதுச் செயலாளரிடம் கையளித்திருந்தார்.

1981ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 64(1) ஆம் பிரிவின் பிரகாரம் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக, பாராளுமன்ற செயலாளர் நாயகத்தினால் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு சபையில் உள்ள வெற்றிடத்தை எழுத்துப்பூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share: