Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்ட சாந்தனின் சடலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அங்கு பிரேத பரிசோதனைகள் இடம்பெறவுள்ளதுடன் அதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 28ஆம் திகதி சென்னையில் உயிரிழந்த சாந்தன் என்ற சுதேந்திர ராசாவின் சடலம் நேற்று முற்பகல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முற்பகல் 11.35 அளவில் ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 122 என்ற விமானம் ஊடாக அவரது சடலம் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.

Share: