Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நாட்டில் சில பகுதிகளில் அடையாளம் தெரியாத 4 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவை குருவிட்ட, பேலியகொட, மாரவில மற்றும் ராகமை ஆகிய  பொலிஸ் பிரிவுகளிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.  

குருவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பின்வல பகுதியில் உள்ள  கங்கையில் நிர்வாணமாக காணப்பட்ட சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது . 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட  ஆண் ஒருவருடைய சடலமே மீட்கப்பட்டுள்ளது . இந்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை . 

பேலியகொட 4 ஆம் மைல்  கல்லுக்கு அருகில் பட்டியசந்தி  பகுதியில்  ரயிலால் மோதுண்டு உயிரிழந்த  35 வயதுடைய ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது . இவர் வெள்ளை மற்றும் கறுப்பு நிறத்திலான சட்டை மற்றும் கறுப்பு நிறத்திலான காற்சட்டை அணிந்திருந்துள்ளார் . வலது கையில் பச்சை குத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் . 

மாரவில பகுதியிலுள்ள சதுப்புநிலத்தில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் நிர்வாணமாக  மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்  55 முதல் 60 வயதுடைய ஆண் ஒருவராவார். 

ராகமை – கடவத்தை பகுதியில்  தனியார் நிறுவனமொன்றுக்கு முன்பாக உள்ள படிக்கட்டுகளில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதுடன்  இவர் சாம்பர் நிற புடவை மற்றும் கறுப்பு கை சட்டை அணிந்திருந்துள்ளார் . உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

Share: