போலியான விசாக்களை பயன்படுத்தி ஐரோப்பாவுக்கு தப்பிச்செல்ல முயன்ற இலங்கையர்கள் இருவரை கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள், வவுனியாவைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் ஒருவருமென தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள், விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து இவ்வாறு கைதாகியுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் இன்று அதிகாலை கட்டாரின் டோஹாவுக்கு சென்று டோஹாவிலிருந்து, பிரான்சின் பாரிஸுக்குச் சென்று இறுதியில் ஜேர்மனியின் மியூனிக் நகரை அடைவதற்கு திட்டமிட்டிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், ஆவண பரிசோதனை நடவடிக்கைகளின்போது குறித்த சந்தேகநபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.