Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

முகத்துவாரம் – லெல்லம பிரதேசத்தில் பதிவாகிய துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு உதவிய இளைஞர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 13 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இரு சந்தேக நபர்கள் ஒருவரை சுட்டுக் கொன்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கு உதவிய இரு சந்தேக நபர்களை கொழும்பு சேதவத்தை களுபாலம மற்றும் பெர்குசன் வீதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு 15 ஐ சேர்ந்த 16 மற்றும் 21 வயதுடையவர்கள் எனவும், ஒருவர் கைது செய்யப்படும் போது அவரிடமிருந்து 4.45 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முகத்துவாரம் பொலிஸார் மற்றும் சிசிடியினர் மேற்கொண்டு வருகின்றனர்

Share: