Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட யுக்திய நடவடிக்கையின் கீழ் இன்று (15) அதிகாலை முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் 656 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 535 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவிற்கு அனுப்பப்பட்டுள்ள பட்டியலில் இருந்த 121 சந்தேக நபர்களும் அடங்கியுள்ளனர்

இந்த சுற்றிவளைப்பில் 241 கிராம் 913 மில்லி கிராம் ஹெராயின், 139 கிராம் 892 மில்லி கிராம் ஐஸ்,1 கிலோ 744 கிராம் கஞ்சா, 27,780 கஞ்சா செடிகள், மாவா 10 கிராம், 1521 போதை மாத்திரைகள், 73 கிராம் மதன மோதகம் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 535 சந்தேக நபர்களில் 16 சந்தேக நபர்கள், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் உள்ளவர்களாகும்.

மேலும், ஒருவர் தடுப்புக் காவல் உத்தரவிற்கு அமைய விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், 03 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் குற்றப் பிரிவுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் இருந்த 121 சந்தேக நபர்களில் 06 பேர் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணையும், 102 பேர் போதைப்பொருள் அல்லாத குற்றங்களுக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் ஆகும்.

அதேநேரம் குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 13 சந்தேகநபர்களும் இதில் அடங்கியுள்ளனர்.

Share: