Contact Information

471A, Peradeniya Road, Kandy

We Are Available 24/ 7. Call Now.

மருத்துவ சங்கங்கள் நீங்கலாக குறைந்தது 72 சுகாதாரத் துறை தொழிற்சங்கங்கள் நாளை (01) காலை 6.30 மணி முதல் நாடளாவிய ரீதியில் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன.

DAT கொடுப்பனவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதாக ஜனாதிபதி உறுதியளித்திருந்த போதிலும், அண்மையில் உத்தியோகபூர்வ வெளிநாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய பின்னர், தாம் இதுவரை எவ்வித கலந்துரையாடல்களிலும் ஈடுபடவில்லை என சுகாதார ஊழியர்கள் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், 72 இற்கும் மேற்பட்ட சுகாதாரத் துறை தொழிற்சங்கங்களுடன் இணைந்து நாளை ஆரம்பிக்கப்படவுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதில்லை என அகில இலங்கை தாதியர் சங்கம் தீர்மானித்துள்ளது.

சுகாதாரத் துறையின் தற்போதைய நிலைமை குறித்து மல்வத்து மகாநாயக்க தேரர்களை சந்தித்ததன் பின்னர் அகில இலங்கை தாதியர் சங்க உறுப்பினர்கள் இதனைத் தெரிவித்தனர்.

Share: