Categories: Local News

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து.

நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும் வெள்ள அனர்த்தம், பல்வேறு பகுதிகளில் மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ளது. இந்த அனர்த்தம் பல கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், பல உயிர்களை பறித்துள்ளது. குறிப்பாக, மாவடிப்பள்ளி டிராக்டர் விபத்தில் உயிரிழந்த மத்ரஸா மாணவர்களின் மரணம், நாட்டின் அனைத்து மக்களையும் ஆழ்ந்த துயரத்தில் மூழ்கடித்துள்ளது.

இது தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பலர் தொடர்ந்து வாதங்களும், கருத்துக்களும் பரிமாறிக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. சில கருத்துகள் ஆக்கபூர்வமாக இருந்தாலும், பெரும்பாலான பதிவுகள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டும் விதத்தில் பொறுப்புக்கூறலற்றவையாக இருக்கின்றன.

நடந்து முடிந்த விபத்து ஒரு பெரும் அனர்த்தமாக இருந்தாலும், அதனை இறைவனின் நாட்டம் என நம்பி  ஏற்றுக்கொள்வது முஸ்லிம்களாகிய எமது நம்பிக்கையும் கடமையுமாகும்.

இவ்விபத்தை ஒரு துயரகரமான பாடமாகக் கண்டு, விபத்திற்கான உண்மையான காரணங்களை ஆராய்ந்திட வேண்டும். அடுத்தடுத்து, ஆதாரமற்ற மற்றும் பக்கச்சார்பான பொய்யான தகவல்களை பகிர்வதை தவிர்க்க வேண்டும். மேலும், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கையாக நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதித்து, அவற்றை உடனடியாக நடைமுறைப்படுத்த துறைசார் அதிகாரிகளிடம் தேவையான அழுத்தங்களை அளிக்க வேண்டும்.

எது எவ்வாறு இருப்பினும் இவ்வாறான இள வயது மரணங்கள் என்பது பெற்றோர்ளையும் உறவினர்களையும் மிகவும் கவலைக்குட்படுத்தக் கூடிய விடயமாகும்.

எனவே உயிரிழந்த அனைவருக்கும் நாம் இறைவனிடத்தில் ஜன்னத்துல் பிர்தவ்ஸினை வழங்க பிரார்த்திப்பதோடு அவர்களை இழந்து தவிக்கின்ற அவர்களுடைய பெற்றோர்கள், குடும்பத்தினர்கள் உறவினர்கள் அனைவருக்கும் இறைவன் நிரப்பமான பொறுமையை வழங்க வேண்டுமெனவும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி சார்பாக பிரார்த்திக்கின்றோம். இழப்பால் துயருறும் அனைவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அத்துடன் நடந்து முடிந்துள்ள விபத்தினை காரணம் காட்டி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்துவதை விடுத்து எதிர்வரும் காலங்களில் இவ்வாறான விபத்து ஒன்று நடைபெறாமல் தடுப்பதற்காக சகல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதமாக மேற்கொள்வதே விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு நாம் செலுத்துகின்ற உண்மையான மரியாதையாக இருக்கும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

Fathima Hafsa

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago

அச்சுறுத்தல் காணப்படும் பிரதேசங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்கு புதிய தீர்வுகள் வழங்க வேண்டும் ; ஜனாதிபதி

அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…

8 months ago