அனைத்து பார்மெடிலும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர்: மெக்கல்லத்துக்கு புதிய பொறுப்பு
நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் அனைத்து ஃபார்மெட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் டெஸ்ட் பார்மெட் பயிற்சியாளராக இருக்கும் நிலையில், தற்போது ஒயிட் பால் அணிகளுக்கும் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2022-ம் ஆண்டு இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சியாளராக நியூசிலாந்து முன்னாள் வீரர் பிரென்டன் மெக்கல்லம் நியமிக்கப்பட்டார். மெக்கல்லம் வருகை பிறகு ‘பேஸ்பால்’ என்ற அதிரடி ஆட்டத்தை டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்தியது. அதாவது டி20 போட்டி போல் டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடுவது. பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் ஆக்ரோஷம், அதிரடி என்பதே அதன் பொருள். கிட்டத்தட்ட மெக்கல்லம் ஒரு வீரராக எப்படி விளையாடுவாரோ, அதனை பயிற்சியாளராகவும் சொல்லிக் கொடுத்தார். இந்த ‘பேஸ்பால்’ முறையில் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய உச்சத்தை தொட்டது. குறிப்பாக, மெக்கல்லம் – பென் ஸ்டோக்ஸ் காம்போ ‘பேஸ்பால்’ ஆட்டத்தால் கிரிக்கெட்டில் டாக் ஆஃப் தி டவுனாக இருந்தன.
இந்த நிலையில் தான் பிரென்டன் மெக்கல்லம் அனைத்து ஃபார்மட்களிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அண்மையில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர்களில் இங்கிலாந்து தோல்வியை தழுவியதன் எதிரொலியாக அந்த அணியின் ஒயிட் பால் பயிற்சியாளராக இருந்த மேத்யூ மோட் ராஜினாமா செய்தார்.
அவரின் ராஜினாமாவுக்கு பிறகே தற்போது அனைத்து ஃபார்மட்களிலும் இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக மெக்கல்லம் நியமிக்கப்பட்டுள்ளார். 2027-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள அடுத்த 50 ஓவர் உலகக் கோப்பை வரை மெக்கல்லம் பயிற்சியாளராக இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…