அத்துருகிரிய பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட க்ளப் வசந்தவின் சடலம் தற்போது கொழும்பு பொரளை பிரதேசத்தில் உள்ள பிரபல மலர்சாலை ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.
க்ளப் வசந்தவின் பூதவுடல் வைக்கப்பட்டுள்ள மலர்சாலைக்கு இரண்டாவது மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அந்த அழைப்பில் வசந்தவின் உடலை பொதுமக்கள் பார்வைக்காக வைக்க வேண்டாம் என்று மீண்டும் கூறப்பட்டுள்ளது.
கஞ்சிபானி இம்ரான் வழங்கிய அறிவுறுத்தல் வசந்தவின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டதா என அந்த தொலைபேசி அழைப்பில் வினவியுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 10ம் திகதி குறித்த மலர்சாலைக்கு அச்சுறுத்தல் அழைப்பு விடுக்கப்பட்டு, வசந்தவின் பூதவுடலை அங்கு வைக்க வேண்டாம் என்று கூறப்பட்டது.
அதற்கமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அந்த அழைப்பு வெளிநாட்டில் இருந்து வந்துள்ளமை பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அச்சுறுத்தல் காரணமாக மலர்சாலை அமைந்துள்ள பகுதியைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, படுகொலை செய்யப்பட்ட சுரேந்திர வசந்த பெரேரா எனப்படும் க்ளப் வசந்தவின் இறுதிக் கிரியைகள் இன்று (13) பிற்பகல் நடைபெறவுள்ளன.
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…