Categories: Local News

காணாமல் போயிருந்த பெண் சடலமாக மீட்பு

பலாங்கொடை, வேவல்வத்த, படேவல ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட பெண்ணின் சடலம் நேற்று பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது.

வேவல்வத்த – பெல்லன்கம பிரதேசத்தைச் சேர்ந்த பி.டி. தயாவதி என்ற 68 வயதுடைய பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 23 ஆம் திகதி தனது மகளின் வீட்டுக்குச் சென்று மீள தனது வீட்டிற்கு செல்வதாக கூறி சென்ற அவர், வீடு திரும்பாததால் அவரின் உறவினர்கள் வேவல்வத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனையடுத்து வேவல்வத்த பொலிஸார் பிரதேச மக்கள் மற்றும் மீட்பு குழுவினர் இணைந்து குறித்த பெண்ணை தேடும் நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளனர்.

சீரற்ற காலநிலை மற்றும் ஆறுகளின் நீர் மட்டம் அதிகரிப்பால் மீட்பு பணிகளை தொடர முடியாமல் இருந்த சந்தர்பத்தில் குறித்த பெண்ணின் சடலம் ஆற்றில் இருந்து 2 கிலோ மீற்றர் தூரத்தில் இருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் வேவல்வத்த பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிசான்த ஜயதிலக்க தலைமையில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago