Categories: Local News

ISIS உறுப்பினர்களுடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது

இந்தியாவில் கைதான ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் 4 இலங்கையர்களுடன் தொடர்புடைய மேலும் 2 பேர் சிலாபம் – பங்கதெனிய பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதுகாப்பு பிரவினரால் தேடப்பட்டு வரும் ஒஸ்மன் ஜெராட் என்பவரின் மனைவியின் இரு சகோததர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களை தடுத்து வைத்து விசாரிக்க பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதேவேளை, இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளான 4 இலங்கையர்களையும், ஒஸ்மன் ஜெராட் என்பவரே இலங்கையிலிருந்து வழிநடத்தியுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

கடந்த 20ஆம் திகதி ஐ.எஸ். பயங்கரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் 4 இலங்கையர்களும் அஹமதாபாத்தின் குஜராத் பிராந்தியத்தில் குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் தொடர்பாக இலங்கையின் பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுத்த விசாரணைகளில் பல விடயங்கள் வெளிவந்துள்ளன.

அதன்படி, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான மொஹம்மட் நுஸ்ரத் சிங்கப்பூர், மலேசியா, துபாய் உள்ளிட்ட நாடுகளிலிருந்து தொலைபேசி உபகரணங்கள் மற்றும் மின்சார சாதனங்களை கொண்டு வந்து கொழும்பில் விற்பனை செய்தவர் என தெரியவந்துள்ளது.

அத்தோடு, கொழும்பில் தங்கியிருந்த நுஸ்ரத் 2020 செப்டம்பர் 16 ஆம் திகதி ஹெரோயின் வைத்திருந்ததாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் எனவும் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஏனைய 2 உறுப்பினர்களான மொஹம்மட் பாரிஸ் மற்றும் மொஹம்மட் ரஸ்டீன் ஆகியோர் இந்தியாவிற்கு சென்றுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

மொஹம்மட் பாரிஸ் புறக்கோட்டையில் கூலித்தொழிலாளியாக பணியாற்றியுள்ளதுடன் கடந்த வருடம் மார்ச் மாதம் 11 ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் முதலாம் திகதி கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டிருந்தார் என்றும் தெரியவந்துள்ளது.

மேலும், 2022 செப்டம்பர் 16 ஆம் திகதி கொழும்பு கரையோர பொலிஸாரால் மொஹம்மட் ரஸ்டின் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அதேநேரம், ஈஸ்டர் தாக்குதலை நடத்திய தேசிய தௌஹித் ஜமாத் பயங்கரவாத குழுவின் உறுப்பினர்களே இவ்வாறு இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும், சந்தேகநபர் தொடர்பான தகவல்களை வழங்கும் நபருக்கு 20 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago