‘மஞ்சுமல் பாய்ஸ்’ என்ற மலையாள படத்தில் கமல்ஹாசன் நடித்த ‘குணா’ படத்தின் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்ற இளையராஜா இசையமைத்த பாடல் இடம்பெற்றிருந்தது.
அத்திரைப்படம் கேரளாவை விட தமிழகத்தில் மிகப்பெரும் வெற்றியை பெற்றிருந்த நிலையில், தற்பொழுது ‘மஞ்சுமல் பாய்ஸ்’ பட தயாரிப்பு நிறுவனத்திற்கு இளையராஜா சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
அனுமதியின்றி குணா படப் பாடலை பயன்படுத்தியதாக இளையராஜா சார்பில் அவரது தரப்பு வழக்கறிஞர் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.
பாடலை உருவாக்கியவர் என்ற முறையில் பதிப்புரிமைச் சட்டப்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பாடலை பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அந்த நோட்டீஸில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
உரிய இழப்பீடு வழங்காவிட்டால் பதிப்புரிமையை வேண்டுமென்றே மீறியதாகக் கருதி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டைட்டில் டீசரில் இளையராஜா இசையில் உருவான ‘வா வா பக்கம் வா’ பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டு இடம்பெற்றிருந்தது.
இதன்போது கூலி படத்தில் தன்னுடைய இசையை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு இளையராஜா நோட்டீஸ் அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…