கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உள்ளிட்டோர் பயணித்த ஜீப் ரக வாகனத்தின் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்தில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த மற்றும் அவரது மெய் பாதுகாவலர் ஆகியோர் உயிரிழந்தனர்.
இந்தநிலையில் அவர்கள் பயணித்த ஜீப் ரக வாகனத்தின் சாரதி வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 5ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் குறித்த சாரதி காவல்துறை பாதுகாப்பின் கீழ் ராகமை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் ஆராய்ச்சிக்கட்டுவையில் உள்ள அவரது காரியாலயத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
தற்போது அவரது உடலுக்கு பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று முதல் இன்று பிற்பகல் வரை பொரளையில் உள்ள தனியார் மலர்சாலையில் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதுடன், பல்வேறு அரசியல் தரப்பினர்களும் அங்கு சென்று அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…