கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின் ஊடாக சாமதானம்” என்ற தொனிப் பொருளில் மட்டக்களப்பில் பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு ஒன்று அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஒற்றுமை , சகோதரத்துவம், தலைமைத்துவ பண்புகள் என்பன வற்றை மேலோங்க செய்ய இவ் விளையாட்டு போட்டி கடந்த சனிக்கிழமை (25.01.2025) அன்று இடம்பெற்றது. இதன்போது பரிசில்கள், நினைவு சின்னக்கள் என பல்வேறு விடயங்கள் நடந்தேறின.
ஜப்பான் அரசோடு இணைந்து இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியம் (UNFPA) மற்றும் எலயன்ஸ் டிவலப்மன்ட் டிரஸ்ட் (ADT) நிறுவனங்களின் நிதி உதவியில் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
கப்சோ [GAFSO] வின் திட்டப்பணிப்பாளர் A.J. காமில் இம்டாட் தலைமையில் நடை பெற்ற இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மற்றும் மத குருமார்கள் மற்றும் கப்சோ நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…
நாட்டில் நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகளுக்காக தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்கிற கிழக்கு மாகாணத்தில் உள்ள…