Categories: Local News

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு தான் எங்கள் போராட்டம் ஆரம்பமாகும் என ரணில் விக்கிரமசிங்க அறிவிப்பு

நவம்பர் 14 ஆம் திகதிக்கு பிறகு எமது போராட்டம் தொடங்கும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக அனைத்து தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் உரையாற்றும் வேளையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

தாம் எழுப்பும் உண்மையான பொருளாதார பிரச்சினைகளை அரசியல் சேறு பூசி மறைக்க முயல வேண்டாம் என தெரிவித்த ரணில் விக்கிரமசிங்க, நாட்டுக்கு நல்ல எதிர்காலம் வேண்டுமெனில் சிலிண்டர் சின்னத்திற்கு வாக்களித்து அனுபவம் வாய்ந்த அணியை பாராளுமன்றத்தில் நியமிக்குமாறு கோருவதாக தெரிவித்தார்.

இன்னும் சில நாட்களில் புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் ஐ.எம்.எப் உடன்படிக்கையை நிராகரித்த NPP அரசு , தற்போது ஐஎம்எப் உடன் சந்தித்து அதற்கேற்ப செயல்படுவது குறித்து ஆலோசித்து வருகிறது. அவற்றில் ஏதேனும் திருத்தங்கள் உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது.

மேலும், IMF உடன்படிக்கை, அரசாங்கத்தின் கொள்கை, அரசாங்கத்தின் பார்வையில் IMF மற்றும் வேலைத்திட்டம் குறித்து ஜனாதிபதி அவர்கள் நாட்டிற்கு விளக்கமளிக்க வேண்டும்.

இதைப் பற்றி அறிக்கை விடுவதற்குப் பதிலாக, பிறரைக் குற்றம் சாட்டுவதும், அவதூறாகப் பேசுவதும்தான் ஜனாதிபதியின் கடமையாக உள்ளது… ராஜபக்ஸேக்களும் இதை தான் செய்தார்கள் என ரணில் மேலும் தெரிவித்தார்.

Fathima Hafsa

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago