Categories: Local News

சுமந்திரன், டக்ளஸ் போன்றோருக்கு அமைச்சு பதவிகள் வழங்க மாட்டோம் – தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களுக்கே அமைச்சுப் பதவிகள் பகிரப்படும் என கட்சியின் தேசிய அமைப்பாளர் தெரிவிப்பு

கடந்த அரசாங்கத்திலிருந்து கொண்டு அவர்களை ஆதரித்து ஊழலுக்குத் துணை போன எவருக்கும் தேசிய மக்கள் சக்தியில் அமைச்சர் பதவி கிடைக்காது என அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – பலாலி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு ஒருவிதமாகவும் பணம், பொருள் படைத்தவர்களுக்கு அவை வேறு விதமாகவும் கடந்த காலங்களில் பிரயோகிக்கப்பட்டுள்ளன.

எனவே, அனைவருக்கு நீதி சமமாக வழங்கப்பட வேண்டும் என்பதற்காகவே நாங்கள் நாடாளுமன்றத்திற்கு ஊழலற்றவர்களைத் தேர்வு செய்து அனுப்ப வேண்டும்.

யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவது கடினம் என்ற போதிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தன்னால் முடியுமானவற்றைச் செய்யும்.

தற்போது டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்து அமைச்சுப் பதவியைப் பெறப்போவதாகக் கூறுகிறார்.

அதே போல சுமந்திரன், ஸ்ரீதரன் ஆகியோரும் ஜனாதிபதியைச் சந்தித்து தமது நண்பர்கள் ஆதரவாளர்களுக்கு ஜனாதிபதி தமக்கு அமைச்சர் பதவி தருவதாகக் கூறுகின்றனர்.

எவ்வாயினும், தேசிய மக்கள் சக்தியில் போட்டியிட்டு வெற்றிபெறுபவர்களுக்கே அமைச்சுப் பதவிகள் பகிரப்படும் என தேசிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

Fathima Hafsa

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago