Categories: Local News

சுற்றுலாத்துறை வருமானம் அதிகரிப்பு

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது, ​​இந்நாட்டில் பெறப்படும் வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகளின் அளவும், சுற்றுலாத்துறையின் வருமானமும் அதிகரித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் சுற்றுலாத்துறை மூலம் இலங்கை 185.6 மில்லியன் டொலரை ஈட்டியுள்ளது.

அதன்படி இவ்வருடம் ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் ஈட்டிய மொத்தத் தொகை 2533.7 மில்லியன் டொலராகும்.

கடந்த வருடத்தின் (2023) முதல் 10 மாதங்களில் 1593.4 மில்லியன் சுற்றுலா வருமானத்துடன் ஒப்பிடுகையில் இது 59% வளர்ச்சியாகும்.

இந்த பின்னணியில், 2024 நவம்பர் மாதம் முதல் 5 நாட்களில் மாத்திரம் 30,620 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதனுடன், 2024 இல் இதுவரை இலங்கைக்கு வந்துள்ள மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,651,335 ஆக அதிகரித்துள்ளது.

நவம்பர் முதல் 5 நாட்களில், இந்தியாவில் இருந்து அதிக பட்சமாக 7,785 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வந்துள்ளனர். அதன் எண்ணிக்கை 4,488 ஆகும்.

அதன் பின்னர் ஜேர்மனி, பிரித்தானியா, அவுஸ்திரேலியா, சீனா ஆகிய நாடுகளிலிருந்து அதிகளவான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

இதேவேளை, இந்த வருடத்தின் முதல் 10 மாதங்களில் மாத்திரம் நாட்டிற்குக் கிடைத்த வெளிநாட்டுப் பணம் 5,431 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

2024 ஒக்டோபர் மாதத்தில், வெளிநாடுகளில் உள்ள இலங்கைப் பணியாளர்களிடமிருந்து பெறப்பட்ட வெளிநாட்டுப் பணம் 587.7 மில்லியன் அமெரிக்க டொலராகும்.

2023 ஜனவரி முதல் ஒக்டோபர் வரையிலான 10 மாத காலத்துடன் ஒப்பிடுகையில் இது 11.7% அதிகமாகும்.

Fathima Hafsa

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

7 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

9 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago