Categories: Local News

இந்திய வீட்டு உதவி கிராமம் மக்களின் பாவனைக்கு வழங்கப்பட்டது.

மொனராகலை மாவட்டத்தின் மெதகம பிரதேச செயலகப் பிரிவில் இந்திய உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட மாதிரிக் கிராமம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிராமிய மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சின் செயலாளர் ஏ.எம்.பீ.எம்.பீ. அதபத்து தலைமையில் அண்மையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இந்த கிராமம் தித்தவேல்கிவுல இந்திய மாதிரி கிராமம் என்று பெயரிடப்பட்டுள்ளதோடு இந்த கிராமம் 1.1206 ஹெக்டேயர் (02 ஏக்கர்) பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. வீடுடன் ஒரு நபருக்கு 15 பேர்ச்சிற்கு குறையாத காணி வழங்கப்பட்டுள்ளது. கிராமத்தில் கட்டப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை 24 ஆகும். நீர், மின்சாரம் மற்றும் உள்ளக வீதி அமைப்பு கொண்ட இக்கிராமத்திற்கு 44,494,678.00 ரூபா செலவிடப்பட்டுள்ளது.இக்கிராமத்தை நிர்மாணிப்பதில் பயனாளிகளின் பங்களிப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பிரதேச செயலகம், பிரதேச சபை என்பனவும் பங்களித்துள்ளன.
இக்கிராமத்தின் நிர்மாணப்பணிகள் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் உதவியின் கீழ் ஒரு குடும்பத்திற்கு 05 இலட்சம் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து தலா 1 இலட்சம் ரூபாவும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. உள்கட்டமைப்பு அபிவிருத்திற்காக மின்சார சபை 800,000 செலவையும், குளிரூட்டும் நீர் திட்டத்திற்கு 4,071,328 செலவையும் செய்துள்ளது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம்.ரணதுங்க மற்றும் பொது முகாமையாளர் பொறியியலாளர் கே.ஏ. ஜானக உள்ளிட்ட   அமைச்சின் அதிகாரிகள் மற்றும் இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Fathima Hafsa

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

7 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

9 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

9 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

9 months ago