பொதுத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்களிப்புக்கான மூன்றாம் நாள் இன்றாகும் (04).
இதன்படி, ஒக்டோபர் 30 மற்றும் நவம்பர் 1 ஆம் திகதிகளில் தபால்மூல வாக்கினை அளிக்க முடியாதவர்கள், முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் வாக்காளர்களுக்கும் இன்று தபால் வாக்குகளை அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தபால்மூல வாக்கினை இன்றும் அளிக்க முடியாத தபால்மூல வாக்காளர்களுக்கு நவம்பர் 07 மற்றும் 08ஆம் திகதிகளில் தமது பணியிடம் அமைந்துள்ள மாவட்டத்திலுள்ள மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால்மூல வாக்கினை அளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
இதனிடையே, வாக்குப்பதிவு மற்றும் விருப்பு வாக்கு குறித்து தெளிவுபடுத்தும் அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு வாக்கு உள்ளது, அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவிற்கு வழங்கப்படலாம்.
வாக்கு அளிக்கப்படும் அரசியல் கட்சி அல்லது சின்னத்தின் முன் அல்லது சுயேச்சைக் குழுவின் எண் மற்றும் சின்னத்திற்கு முன் உள்ள இடத்தில் புள்ளடி அடையாளம் இடப்பட வேண்டும்.
அதன்பிறகு, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி அல்லது சுயேச்சைக் குழுவால் பரிந்துரைக்கப்படும் மூன்று வேட்பாளர்களுக்கு மேற்படாதவாரு விருப்பு வாக்கினை அளிக்க, ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒதுக்கப்பட்ட வரிசை எண் கொண்ட பெட்டியில் புள்ளடி அடையாளத்தை இடவேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், வாக்காளர் ஒன்றுக்கு மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்களுக்கு வாக்களித்திருந்தால் அல்லது வாக்குச் சீட்டில் ஏதேனும் குறியீடு வைக்கப்பட்டால், அந்த வாக்கு செல்லுபடியாகாது.
மேலும், வாக்குப்பதிவு மற்றும் விருப்பு வாக்கின் போது புள்ளடி மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…