Categories: Local News

நண்பிகளுடன் இரண்டு மாடி வீடொன்றில் தங்கியிருந்த பட்டதாரி பெண் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழப்பு

பாதி கட்டி முடிக்கப்பட்ட இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியின் பாதுகாப்பற்ற பகுதியில் இருந்து தவறி விழுந்து பட்டதாரி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் முகாமைத்துவ உதவியாளராக கடமையாற்றிய நிவித்திகல, கால்லகே மண்டிய பிரதேசத்தை சேர்ந்த 30வயதுடைய ஹன்சனி பாக்யா ஜயதிலக்க என்ற யுவதியே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் பத்தரமுல்லை பிரதான வீதி, சம்பத் பிளேஸில் உள்ள இரண்டு மாடி வீட்டின் மேல் மாடியின் பின் பகுதியில், மேலும் மூன்று யுவதிகளுடன் தற்காலிகமாக தங்கி வந்துள்ளார். குறித்த பெண் கடந்த வெள்ளிக்கிழமை (11) அன்று  வேளைக்கு சென்று  மாலை 6.40 மணியளவில் வந்த நிலையில் அவரின் நண்பி அவளை அழைத்த போது தான் இரவு உணவிற்காக கொண்டு வந்த இறால் மீனை தயார் செய்வதாக  கூறியுள்ளார்.

அதன் பின்னர் நண்பி குளியலறைக்கு சென்ற நிலையில் , அலறலுடன் பலத்த சத்தம் கேட்டதும்  வெளியே வந்து பார்த்த போது தனது தோழி மேல் மாடியில் இருந்து கீழே விழுந்து கிடப்பதைக் கண்டு, உடனடியாக உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அயலவர்கள் பெண்ணை சுவசரிய ஆம்புலன்ஸ் மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதுடன்  அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Fathima Hafsa

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago