மூதூர் பட்டித்திடல் கிராமத்தில் இன்று(06) காலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,இனவாதியும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவருமே இம்முறை ஜனாதிபதியாக வரப்போகின்றார்.அதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை.
இருப்பினும் அவர்களுக்கு ஒரு செய்தியை சொல்வதற்காகவே ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.கடந்த காலங்களில் நாம் ஏமாற்றப்பட்டு இருக்கின்றோம். இம்முறையும் ஏமாற்றப்படுவதற்கு தயாராக இல்லை.
தமிழ் தேசிய பொதுக்கூட்டமைப்பு எடுத்த முடிவானது ஆரோக்கியமான முடிவென எம்மை சந்திக்கின்ற மக்கள் தெரிவிப்பதோடு அவர்கள் சங்கு சின்னத்திற்கு வாக்களிக்கவும் தயாராக உள்ளனர்.யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்த எமது பிரச்சாரத்தை தற்போது திருகோணமலையில் மேற்கொண்டு வருகின்றோம்.வடக்கு கிழக்கின் சகல பகுதிகளுக்கு சென்று தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம்.
இதற்கு முன்னர் பொத்துவில்- பொலிகண்டிப் போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களை நடத்தி உள்ளோம்.அவ்வாறே இதுவும் புள்ளடி இடுகின்ற போராட்டமாகும் எனவும் தெரிவித்தார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…