கலாசாரம் மாற்றப்பட வேண்டும். ஆனால், இன்னுமே மாற்றங்கள் ஏற்படவில்லை.
இந்நிலையில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள 9வது ஜனதிபதித் தேர்தல் ஒரு மாற்றத்துக்கான தேர்தலாக அமைய வேண்மேன்பது எனது ஆசை மட்டுமல்ல நீதியையும், நியாயத்தையும், சமத்துவத்தையும், சம உரிமையையும் விரும்புகின்றவர்களின் அவாவும் அதுவாகவே இருக்கக் கூடும்.
அது மாத்திரமின்றி ஊழல், மோசடி, அதிகாரத் துஷ்பிரயோகமற்ற ஆட்சியாளர்களினால் ஆளப்படுகின்ற ஒரு நாடாக இலங்கை மிளிர வேண்டும். அதற்கோர் புதிய சக்தி அவசியம். அச்சக்தி தேசிய மக்கள் சக்தியிடம் காணப்படுவதை நான் காண்கின்றேன்.
அத்தோடு, தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்திலுள்ள கோட்பாடுகளும் அதற்கான செயற்பாடுகளும் இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் புதியதோர் அரசியல் கலாசாரத்தை உருவாக்கும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது. அந்த நம்பிக்கையின் அடிப்படையிலும் எந்தவொரு சலுகையும், எதிர்பார்புமின்றி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்கவை ஆதரிக்கத் தீர்மானித்துள்ளேன் என்றும் குறிப்பிட்டதோடு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் உயர் பதவிகளில் இருந்த நான் அவற்றை விட்டு கடந்த இரு வருடங்களாக இவ்வித செயல்பாடுகளில் இல்லாமல் ஒதுங்கி இருந்தேன் பல்வேறு பிரச்சனைகள் இருந்ததன் காரணமாக அதாவது எமது பாராளுமன்ற உறுப்பினர்களின் விடயங்கள், கட்சியின் கட்டுக்கோப்பை மீறியது, 20க்கு கை உயர்த்தியது, ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்த விதம் தொடர்பான விடயம் மற்றும் எனக்கு தேர்தல் வேட்பாளர் தர மறுத்தமை தொடக்கம் பல்வேறுபட்ட முரண்பாடுகள் இருந்தது. இவை என்னுள் பல்வேறு கேள்விகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் நான் இந்த முடிவுக்கு வந்திருக்கின்றேன்.
ஆனால் நான் குறிப்பிட்ட காலமாக இந்த மாற்றத்தை எதிர்பார்த்து இருந்த நிலையில்தான் இது ஒரு சிறந்த சந்தர்ப்பமாக கருதி நான் இந்த முடிவை எடுத்திருக்கின்றேன். மாற்றமாக கட்சியோடு இருந்த முரண்பாட்டு விடயங்கள் இதற்கு ஒரு காரணமாக கூற முடியாது. இந்த முடிவு எனக்குள் நீண்ட நாள் இருந்த எண்ணமாகும் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…