கடந்த இரு தினங்களாக இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பில் அதிகளவானோர் கலந்து கொண்டிருந்தாக பிரதி தபால் மா அதிபர் டி. ஏ. ராஜித. கே. ரணசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை தெரிவித்தார்.
கடந்த இரண்டு நாட்களில் 80% க்கும் அதிகமான தபால் மூல வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
2024 ஜனாதிபதித் தேர்தலை பொறுத்தமட்டில், 712,319 வாக்காளர்கள் இம்முறை தபால்மூல வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
அதன்படி இன்று மூன்றாவது நாளாக தபால் மூல வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை இடம்பெற்றது.
நேற்றும் இன்றும் போன்று முப்படையினர், ஏனைய பாதுகாப்புப் படை உறுப்பினர்கள், ஆசிரியர்கள் உட்பட ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தபால் மூல வாக்களிப்பை அடையாளப்படுத்து சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
இதேவேளை, இன்று வாக்களிக்க முடியாத வாக்காளர்களுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் இரண்டு தினங்கள் மேலதிகமாக வழங்கப்படவுள்ளது.
அந்த நாட்களில் அவர்கள் பணிபுரியும் மாவட்டத்தின் மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் வாக்குகளை அடையாளப்படுத்த முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது
இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…