Categories: Local News

நாட்டுக்காக அரும்பணியாற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் நன்றி விசுவாசமாக இருக்க வேண்டும்.

நாட்டின் பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து பொத்துவில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஸரப் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார பின்னடைவினால் பாதிக்கப்பட்டிருந்த நாட்டை மீட்டெடுத்து குறுகிய காலத்துக்குள் வளமான நாடாக மாற்றியமைத்துள்ளார்.

நாட்டுக்காக அரும்பணியாற்றி வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாம் நன்றி விசுவாசமாகஇருக்க வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளுக்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இந்நிதி மூலம் எமது பிராந்தியத்தில் பின் தங்கிய பிரதேசங்களில் அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்து இருளில் மூழ்கி இருந்த போது யாரும் முன்வரவில்லை. நாடும், சர்வதேசமும் ஏற்றுக் கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டை மீட்டெடுத்து நாட்டை அபிவிருத்தி பாதைக்கு மீள கட்டியெழுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Fathima Hafsa

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago