“மக்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்” – தோல்விக்கான காரணங்களை அடுக்கும் பாகிஸ்தான் கேப்டன்


“வங்கதேச அணிக்கு எதிரான தோல்விக்காக பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். டெஸ்ட் அணியை எப்படி மேம்படுத்தலாம், எப்படி முன்னோக்கி கொண்டுசெல்வது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.” என்று பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் தெரிவித்துள்ளார்.

வங்கதேச கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்ட் போட்டியில் வங்கதேச அணி 10 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்த நிலையில், 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்தது. வங்கதேச அணியோ 78.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 262 ரன்கள் எடுத்தது. முதல் இன்னிங்ஸில் 12 ரன்கள் முன்னிலையுடன் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் 2-வது இன்னிங்ஸை தொடங்கினாலும் வங்கதேசத்தின் நேர்த்தியான பந்துவீச்சை எதிர்கொள்ள இயலவில்லை.

இதனால், பாகிஸ்தான் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பாகிஸ்தான் அணி 172 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து 185 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்கதேசத்தை கட்டுப்படுத்த பாகிஸ்தான் பவுலர்கள் தவறினர்

இதனால், 56 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வங்கதேச அணி வெற்றிபெற்றது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை முதல்முறையாக வங்கதேசம் கைப்பற்றி சாதனை படைத்தது. அதேநேரம், ஒயிட் வாஷ் பெற்ற பாகிஸ்தான் அணியை அந்நாட்டு ரசிகர்கள் இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு கருப்பு நாள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையே, வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் ஷான் மசூத் பேசுகையில், “தோல்விக்காக பொறுப்பேற்று நாட்டு மக்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். டெஸ்ட் அணியை எப்படி மேம்படுத்தலாம், எப்படி முன்னோக்கி கொண்டுசெல்வது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது.கிட்டத்தட்ட 10 மாத இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது என்பது எளிதான காரியம் கிடையாது. இந்த தோல்விக்கு எந்தவித காரணம் இல்லை. தோல்வியை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அணியில் உள்ள அனைவரும் சிறப்பாக செயல்பட விரும்பினர் என்பது உண்மை. ஆனால் உண்மையை சொல்ல வேண்டும் என்றால், வீரர்கள் யாரும் சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு தயாராக இல்லை. அணியை முன்னேற்ற விரும்பினால் தோல்விகளை பொறுத்துக்கொள்ள வேண்டும். முதல் படியாக நல்ல வேகப்பந்து வீச்சாளர்களை உருவாக்க வேண்டும். தொடர்ந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் பந்து வீச்சாளர்களுக்கு நிலையான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

mohamed azly

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago