மஹிந்த சிந்தனைக் கொள்கையுடன் இருக்கும் மக்களின் 35 சதவீத வாக்குகளைப் பெற்று தனது தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்துள்ளதால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ இலகுவாக ஜனாதிபதியாக முடியும் என இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக்க இன்று தெரிவித்துள்ளார்.
இம்முறை எந்த வேட்பாளரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற முடியாது என்றும், 35 சதவீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியும் என்றும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
இம்முறை 50 வீதத்திற்கு மேல் எவராலும் பெற முடியாது. ஆரம்பத்தில் நான்கு அரசியல் கட்சிகள் களமிறங்கி, அது தற்போது மூன்றாகக் குறைக்கப்பட்டுள்ளது. நாமல் ராஜபக்ச மற்றும் இரண்டு வேட்பாளர்கள் இப்போது களத்தில் உள்ளனர். மூன்று வேட்பாளர்களும் 80 சதவீதத்தைப் பெறுவார்கள். நான்காவது வேட்பாளருக்கும் 15 வீதமும், ஏனைய வேட்பாளர்கள் 5 வீதமும் பெற்றுக் கொள்வார்கள் எனில், 35 வீதமான வாக்குகளைப் பெற்று நாமல் ராஜபக்ஷ வெற்றியீட்ட முடியும் ‘மஹிந்த சிந்தனை’ கொள்கையில் அவர் இன்னும் 4 முதல் 5 லட்சம் வரை பெறலாம் என, டலஸ் அலகப்பெரும கூறியதாக, அவர் கூறினார்.
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…