நேபாளத்தில் – மதன்- ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த 2 பேருந்துகள் நிலச்சரிவில் சிக்கி அருகில் உள்ள திரிசூலி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
இந்த விபத்தில் 66க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
நெடுஞ்சாலையில் பயணித்த இரண்டு பேருந்துகள் மீது பாரிய மண்மேடு விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்திய நேபாளத்தில் உள்ள மதன்-ஆஷ்ரித் நெடுஞ்சாலையில் இன்று (12) காலை இந்த விபத்து நடந்துள்ளது.
தற்போது அந்த பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மீட்புப் பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேபாளத்தின் மத்திய பகுதியில் இருந்து பாயும் திரிசூலி ஆற்றின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளதால், காணாமல் போனவர்களை தேடும் பணியில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…
UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…
விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…
இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…
நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…
அனர்த்த முகாமைத்துவ நிறுவனக் கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மாத்திரம் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்குக் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்…