Categories: Local News

போராட்டத்தில் ஈடுபட்ட ரயில் ஊழியர்கள் பணிநீக்கம்

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள அனைத்து ரயில் நிலைய அதிபர்கள் மற்றும் பொது முகாமையாளர்கள் தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன கடுமையான தீர்மானத்தை எடுத்துள்ளார்.

இன்று (11) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர், பணிக்கு சமூகமளிக்கத் தவறிய ரயில் ஊழியர்கள் பதவியில் இருந்து விலகுவதை ஒப்புக்கொண்டு அதற்கான கடிதங்கள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.

பதவி உயர்வு வழங்காமை உள்ளிட்ட பல பிரச்சினைகளை முன்வைத்து கடந்த 09ஆம் திகதி நள்ளிரவு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நேற்று நண்பகல் 12 மணிக்குள் பணிக்கு சமூகமளிக்காவிட்டால், பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ரயில் ஊழியர்கள் பணியை கைவிட்டதாக கருதப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பதில் பொது முகாமையாளர் எஸ்.எஸ்.முதலிகே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

2 months ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

6 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

7 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

8 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago