Categories: Local News

அத்துருகிரிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்

அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த வர்த்தகரான வசந்த பெரேரா தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

2019ஆம் ஆண்டு டுபாயில் பாதாள உலகக் கும்பல் தலைவர்களாக இருந்த மாகந்துரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் உள்ளிட்டோரை பொலிஸாரில் கைது செய்ததில் க்ளப் வசந்த எனப்படும் வசந்த பெரேராவுக்கு தொடர்பு இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மாகந்துரே மதுஷிற்கு சொந்தமான 100 கோடி ரூபா பணமும் க்ளப் வசந்தவிடம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

கஞ்சிபானி இம்ரான் பல தடவைகள் க்ளப் வசந்தவிடம் அந்தப் பணத்தைத் தருமாறு கோரியுள்ளார்.

ஆனால், அந்தப் பணத்தை க்ளப் வசந்த கொடுக்க மறுத்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நுவரெலியாவில் க்ளப் வசந்தவை கொலை செய்யத் திட்டமிடப்பட்டு அது தோல்வியடைந்துள்ளது.

இவ்வாறான பின்னணியில் க்ளப் வசந்தவை இலக்கு வைத்து அத்துருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் 3 மாதங்களுக்கு முன்னரே திட்டமிடப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையில் பச்சை குத்தும் நிலைய உரிமையாளருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

அதற்கமைய, அதன் உரிமையாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் அவர், பச்சை குத்தும் கலை அறிந்தவர் எனவும், எனினும் அதற்கான ஸ்தாபனமொன்றை நடத்துவதற்கு பணம் அவரிடம் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பலபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் தனது நண்பர் ஊடாக வெளிநாட்டவர் ஒருவருடன் தொடர்புகளைப் பேணி வந்துள்ளார்.

பச்சை குத்தும் நிலையத்தின் திறப்பு விழாவொன்றை ஏற்பாடு செய்து, க்ளப் வசந்த உட்பட பிரபலங்கள் சிலரை அழைக்குமாறு, வெளிநாட்டில் உள்ள நபர் குறித்த நபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

டுபாயில் இருந்து அவரது வங்கிக் கணக்கில் 10 இலட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதற்கமைய க்ளப் வசந்தவை திறப்பு விழாவிற்கு வருமாறு சமூக வலைத்தளங்கள் மூலம் அழைப்பு விடுத்துள்ளார்.

அழைப்பை ஏற்று க்ளப் வசந்த, பாடகி கே.சுஜீவா உள்ளிட்டோர் வருகை தந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த நிலையத்திற்கு காரில் வந்த இருவர், 17 நொடிகளில் சம்பந்தப்பட்ட குழுவினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பச்சை நிலைய உரிமையாளர் உட்பட 7 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 10 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

meera

Recent Posts

வாக்காளர்களின் பொறுப்பும், பெண் வேட்பாளர்களின் போராட்டமும்

இலங்கையின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சமீபத்தில் நிறைவடைந்தது. மக்கள் பெருமளவில் பங்கேற்று தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டியமை மிகக் காணத்தக்கதொரு…

1 month ago

கப்சோ நிறுவனத்தின் ‘விளையாட்டின் ஊடாக சாமதானம்’ பாரம்பரிய விளையாட்டு நிகழ்வு மட்டக்களப்பில் வெற்றிகரமாக நடைபெற்றது

கப்சோ நிறுவனத்தினால் அமுல்படுத்தப்பட்டு வரும் சமூக நல்லிணக்கம் , காலநிலை மாற்றம் சுகாதார உரிமைகள் திட்டத்தின் மற்றுமொரு செயற்பாடாக “விளையாட்டின்…

5 months ago

திருகோணமலை இளைஞர்களினால் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நற்பணி!

UNFPA மற்றும் ADT நிறுவனக்களின் அனுசரணையில் திருகோணமலை மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்திய இளைஞர்களின் சமூக ஒருமைப்பாட்டை ஊக்குவிக்கும் திட்டத்தின் ஒரு அங்கமாக…

6 months ago

“மாவடிபள்ளியில் நடந்த விபத்து, நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.”

விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்காக நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG) அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து. நாட்டில் ஏற்பட்டுள்ள பெரும்…

7 months ago

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமியர்கள் பயணடைந்து வரும் நிக்காஹ் சேவை

இலங்கையில் அனைத்து மாகாணங்களில் உள்ள இஸ்லாமிய உள்ளங்கள் எமது நிக்காஹ் சேவையில் பயனடைந்து வருகின்றனர்.இலங்கை முஸ்லிம்கள் வாழும் UK, USA,…

8 months ago

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் சில 200 mm க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி

நேற்றையதினம் (25) பிற்பகல் 11.30 மணியளவில் தென்மேற்கு வங்கக் கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மட்டக்களப்பிலிருந்து 290…

8 months ago